பாலியல் வன்முறையை எதிர்த்து 530 கி.மீ சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட பொள்ளாச்சி வாலிபர்

கோவை : பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைக் கண்டித்து சென்னை - பொள்ளாச்சி வரையிலான சுமார் 530 கி.மீ. சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை வாலிபர் ஒருவர் மேற்கொண்டார்.

கோவை : பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைக் கண்டித்து சென்னை - பொள்ளாச்சி வரையிலான சுமார் 530 கி.மீ. சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை வாலிபர் ஒருவர் மேற்கொண்டார். 



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (28). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறை எதிர்த்து சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். சென்னையில் கடந்த 13-ந் தேதி சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கிய பாலாஜி, சென்னை, விழுப்புரம், சேலம், அவினாசி வழியாக சுமார் 530 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

 



இந்த நிலையில், இன்று மாலை பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். பின்னர், பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரை சந்தித்து, பாலியல் புகாரில் சிக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாலாஜி கோரிக்கை வைத்தார். இதற்கு, வருவாய் கோட்டாட்சியரும் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...