பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 20-ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சியினராக இருந்தாலும், அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து முன்னணி மாநிலம் முழுவதும் வரும் 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சினிமா, சீரியல் மற்றும் குஷ்பு போன்ற நடிகர்களின் நாகரீகமற்ற பேச்சே இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். இந்து முன்னணி பல கோரிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கே ஆதரவளிக்கும். 

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை அளிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. அதேபோல, கை சின்னம், உதயசூரியன் மற்றும் இரட்டை இலையினை மறைக்குமா..? தேர்தல் ஆணையம். சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...