உதகை : பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து உதகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
உதகை : பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து உதகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தைக் கண்டித்து பல அமைப்புகள் சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று உதகை ஏ.டி.சி. பகுதியில் காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முயன்றனர். ஆனால், அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால், காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த முயன்ற போது, சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.