பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.வினர் பொய் பிரச்சாரம் : தி.மு.க.வினர் மனு

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தி.மு.க.வின் புறநகர் மாவட்டச் செயலாளர் மகன் மீது பொய்யாக அவதூறு பரப்பி வரும் அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. வழக்கறிஞர் அணியினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தி.மு.க.வின் புறநகர் மாவட்டச் செயலாளர் மகன் மீது பொய்யாக அவதூறு பரப்பி வரும் அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. வழக்கறிஞர் அணியினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பரவி வருகிறது. அதேபோல, முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு உட்பட சிலருடன் தி.மு.க.வின் தெற்கு மாவட்டச் செயலாளரின் மகன் மணிமாறனுக்கு தொடர்பு இருப்பது போன்ற தகவல்கள் முகநூல் மற்றும் வாட்ஸ் அப்களில் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் எனவும், தி.மு.க.வை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.க.வின் தொழில்நுட்ப பிரிவினர் திட்டமிட்டு செயல்படுவதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்த நிலையில், இன்று அ.தி.மு.க. மாணவரணியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரை சார்ந்தவர்களை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. வழக்கறிஞர்கள் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

பொள்ளாச்சி நகர தி.மு.க. மாணவரணியில் உறுப்பினராக உள்ள மணிமாறன் குறித்து, முகநூல் பக்கத்தில் தவறான தகவல்களை வெளியிடுவது, அவர்களின் குடும்பத்தை மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், எனவே உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். பொள்ளாச்சி வழக்கைத் திசை திருப்ப அ.தி.மு.க.வினர் இது போன்ற பொய்யான சித்தரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...