நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினர் கோவை வருகை

கோவை : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளுக்காக துணை ராணுவத்தினர் ரயில் மூலம் இன்று கோவை வந்தடைந்தனர்.


கோவை : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளுக்காக துணை ராணுவத்தினர் ரயில் மூலம் இன்று கோவை வந்தடைந்தனர்.



நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே, வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கி, மார்ச் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து துணை ராணுவப் படையைச் சேர்ந்த இரு கம்பெனி போலீசார், ரயில் மூலம் கோவை வந்து உள்ளனர். மொத்தம் 168 பேர் வந்து உள்ளனர். அதில், ஒரு கம்பெனி போலீசார் கோவைக்கும், மற்றொரு கம்பெனி போலீசார் மதுரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். அதேபோல, மார்ச் 30-ம் தேதிக்குப் பிறகு துணை ராணுவத்தினர் இன்னும் கூடுதலாக வருவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...