திருப்பூரில் சட்டவிரோதமாக மதுவிற்க மறுத்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு

திருப்பூர் : திருப்பூர் அருகே மது விற்பனை நேரம் முடிந்த பிறகு, மதுபாட்டில் விற்க மறுத்த டாஸ்மாக் ஊழியர் மற்றும் பார் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் அருகே மது விற்பனை நேரம் முடிந்த பிறகு, மதுபாட்டில் விற்க மறுத்த டாஸ்மாக் ஊழியர் மற்றும் பார் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



வஞ்சிபாளையம் பகுதி அருகே அமைந்துள்ள '2002' என்ற எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடையில் நேற்று இரவு 10 மணிக்கு கடையை அடைக்க ஊழியர் நல்லேந்திரன் முற்பட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், நல்லேந்திரனிடம் மது பாட்டில்கள் கேட்டு தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். 



நேரம் முடிவடைந்ததால் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக டாஸ்மாக் ஊழியர் தெரிவித்துள்ளார். இதனை கேட்க மறுத்த அந்த நபர்கள், கடையை அடைக்க வெளியே வந்த போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நல்லேந்திரனை தாக்கினர். 



நல்லேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பார் ஊழியர் கண்ணப்பன் மீதும் அவர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பியோடினர். உடனடியாக இருவரையும் மீட்டு ஊழியர்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...