ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி போட்டி : வைகோ அறிவிப்பு

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நேற்று வேட்பாளர்களை அறிவித்தன. இந்தக் கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிட உள்ளதாக ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அ.கணேசமூர்த்தி ம.தி.மு.க.வின் பொருளாளர் பொறுப்பை வகித்து வருகிறார். வரும் 19-ம் தேதி அ. கணேசமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...