கோவை : வால்பாறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தி.மு.க. பிரமுகரின் மகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை : வால்பாறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தி.மு.க. பிரமுகரின் மகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரவி என்கிற காக்கா ரவி. இவர் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரவேலுவின் உதவியாளராக இருந்திருக்கிறார். இவரது மகன் கவின் (17) வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கவின் வால்பாறை பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி ஒருவரின் மகளான 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் தொடர்பாக கவினின் பெற்றோரிடம் நியாயம் கேட்டுள்ளனர். ஆனால், இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று சிறுமியின் குடும்பத்தினரை கவினின் தந்தை காக்கா ரவி மிரட்டியுள்ளார். இருப்பினும், அவரது மிரட்டலுக்கு அஞ்சாத சிறுமியின் தாய், பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், கவின் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, பிறப்புறுப்பு உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரவி என்கிற காக்கா ரவி. இவர் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரவேலுவின் உதவியாளராக இருந்திருக்கிறார். இவரது மகன் கவின் (17) வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கவின் வால்பாறை பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி ஒருவரின் மகளான 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் தொடர்பாக கவினின் பெற்றோரிடம் நியாயம் கேட்டுள்ளனர். ஆனால், இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று சிறுமியின் குடும்பத்தினரை கவினின் தந்தை காக்கா ரவி மிரட்டியுள்ளார். இருப்பினும், அவரது மிரட்டலுக்கு அஞ்சாத சிறுமியின் தாய், பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், கவின் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, பிறப்புறுப்பு உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.