கோவை : மருதலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் 36 மணிநேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோவை : மருதலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் 36 மணிநேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரமான மருதமலைக்கு அருகே உள்ள பட்டா நிலங்ததில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ படிப்படியாக, அருகே உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான வனப்பகுதிக்கும் வேகமாக பரவியது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் மற்றும் தடாகம் மற்றும் துடியலூர் பகுதிகளைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மதியம் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ நள்ளிரவு வரையிலும் கொளுந்து விட்டு எரிந்தது. இதனை வனத்துறையினரும், தன்னார்வலர்களும் போராடி கட்டுக்குள் கொண்டு முயற்சி செய்தனர். இந்த நிலையில், 36 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீ இன்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் கோவை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு #C4TN உறுப்பினர்கள் உணவு, டார்ச் லைட் மற்றும் பவர் பேங்க் போன்றவற்றை வழங்கினர்.
இதனிடையே, நீலகிரி பையோஸ்பியர் நேட்சர் பார்க் அருகே உள்ள ஆனைகட்டி மலையில் உள்ள தெக்கலூர் வனப்பகுதியில் இன்று காலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் போராடி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரமான மருதமலைக்கு அருகே உள்ள பட்டா நிலங்ததில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ படிப்படியாக, அருகே உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான வனப்பகுதிக்கும் வேகமாக பரவியது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் மற்றும் தடாகம் மற்றும் துடியலூர் பகுதிகளைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மதியம் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ நள்ளிரவு வரையிலும் கொளுந்து விட்டு எரிந்தது. இதனை வனத்துறையினரும், தன்னார்வலர்களும் போராடி கட்டுக்குள் கொண்டு முயற்சி செய்தனர். இந்த நிலையில், 36 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீ இன்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் கோவை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு #C4TN உறுப்பினர்கள் உணவு, டார்ச் லைட் மற்றும் பவர் பேங்க் போன்றவற்றை வழங்கினர்.
இதனிடையே, நீலகிரி பையோஸ்பியர் நேட்சர் பார்க் அருகே உள்ள ஆனைகட்டி மலையில் உள்ள தெக்கலூர் வனப்பகுதியில் இன்று காலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் போராடி வருகின்றனர்.