கோடை சீசனை முன்னிட்டு ஏப்., 6-ம் தேதி முதல் நீலகிரி சிறப்பு மலை ரயில் இயக்கம்

நீலகிரி : கோடை சீசனை முன்னிட்டு வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் நீலகிரி சிறப்பு மலைரயில் இயக்கப்படுவதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி : கோடை சீசனை முன்னிட்டு வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் நீலகிரி சிறப்பு மலைரயில் இயக்கப்படுவதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் உதகை மலை ரயில் தினந்தோறும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து கிளம்பி 12.30 மணிக்கு உதகை சென்றடைகிறது. அதேபோல, உதகையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. இதை தவிர குன்னூரிலிருந்து உதகைக்கு 4 முறை ரயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், கோடை சீசனை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலில் 132 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்பு மலை ரயில், மதியம் 2.30 மணிக்கு உதகை சென்றடைகிறது. இந்த சிறப்பு மலை ரயில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...