கோவை : மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திர இயக்கம் குறித்து சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திர இயக்கம் குறித்து சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தற்போதைய கணக்கெடுப்பின்படி, மொத்தம் 2,76,484 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க இப்பகுதி 29 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திற்கும் தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டு தேர்தல் அதிகாரிகள் நேரிடையாக விளக்கி பயிற்சியளித்தனர்.
குறிப்பாக, புதிதாக இணைக்கப்பட்டுள்ள வாக்காளர்கள், தங்களது வாக்கைப் பதிவு செய்த பின்னர், அந்த வாக்கு யாருக்கு பதிவாகியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில், அருகில் உள்ள இயந்திரத்தில் அதற்கான ஆதார சீட்டு ஏழு நொடிகள் வரை தெரியும். அதன் பின்னர், அச்சீட்டு அந்த இயந்திரதினுள்ளே விழுந்து விடும். அதற்குள் வாக்காளரை சரி பார்த்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என மாதிரி இயந்திரம் மூலம் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தற்போதைய கணக்கெடுப்பின்படி, மொத்தம் 2,76,484 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க இப்பகுதி 29 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திற்கும் தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டு தேர்தல் அதிகாரிகள் நேரிடையாக விளக்கி பயிற்சியளித்தனர்.
குறிப்பாக, புதிதாக இணைக்கப்பட்டுள்ள வாக்காளர்கள், தங்களது வாக்கைப் பதிவு செய்த பின்னர், அந்த வாக்கு யாருக்கு பதிவாகியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில், அருகில் உள்ள இயந்திரத்தில் அதற்கான ஆதார சீட்டு ஏழு நொடிகள் வரை தெரியும். அதன் பின்னர், அச்சீட்டு அந்த இயந்திரதினுள்ளே விழுந்து விடும். அதற்குள் வாக்காளரை சரி பார்த்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என மாதிரி இயந்திரம் மூலம் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.