கோவை : கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே சுற்றித் திரிந்த 15 அடி நீளமுடைய மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினர், அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
கோவை : கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே சுற்றித் திரிந்த 15 அடி நீளமுடைய மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினர், அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
ஆனைகட்டி அருகே உள்ள நீலகிரி பயோஸ்பியர் நேட்சர் பார்க்கில் இருந்து வெளியேறிய 15 அடி நீளமுடைய மலைப்பாம்பு அங்குள்ள பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட வனத்துறையினர், அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். ஆனைகட்டியில் தற்போது காட்டுத் தீ பரவி வருவதால், இதில் பாதிக்காதவாறு மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
ஆனைகட்டி அருகே உள்ள நீலகிரி பயோஸ்பியர் நேட்சர் பார்க்கில் இருந்து வெளியேறிய 15 அடி நீளமுடைய மலைப்பாம்பு அங்குள்ள பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட வனத்துறையினர், அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். ஆனைகட்டியில் தற்போது காட்டுத் தீ பரவி வருவதால், இதில் பாதிக்காதவாறு மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.