நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்தது. எனவே, கடந்த முறை ஒதுக்கப்பட்டிருந்த இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தையே அவர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தார். ஆனால், இந்த முறை இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் மேகலாயாவில் உள்ள கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால், வேறு சின்னத்தை தேர்வு செய்யுமாறு நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்தது. இதில், 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தார். ஆனால், நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மட்டுமே பெண் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் கூறுகின்றன. 

இதனிடையே, வரும் 19-ம் தேதி சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற இருக்கும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி, தனது சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...