நீலகிரி : குன்னூர் டி.டி.கே. சாலை பகுதியில் உள்ள புதர்களில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
நீலகிரி : குன்னூர் டி.டி.கே. சாலை பகுதியில் உள்ள புதர்களில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
குன்னூரில் கடந்த மாதம் காணப்பட்ட பனிப்பொழிவிற்குப் பின், வனங்களில் புற்கள், செடிகள் கருகி காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, பனிப்பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக, வனங்களில் புற்கள், செடிகள் கருகத் துவங்கியுள்ளன. வறட்சி அதிகரித்துக் காட்டுத் தீ அபாயம் ஏற்பட்டுள்ளதால் வன விலங்குகள், உணவு தேடி குடியிருப்புக்குள் வருவது அதிகரித்துள்ளது. வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைத்து, தீ தடுப்பு காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், குன்னூர் டி.டி.கே. சாலைப் பகுதியில் காய்ந்த செடிகளில் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் இருக்குமாறு, குன்னூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஆர். மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
குன்னூரில் கடந்த மாதம் காணப்பட்ட பனிப்பொழிவிற்குப் பின், வனங்களில் புற்கள், செடிகள் கருகி காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, பனிப்பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக, வனங்களில் புற்கள், செடிகள் கருகத் துவங்கியுள்ளன. வறட்சி அதிகரித்துக் காட்டுத் தீ அபாயம் ஏற்பட்டுள்ளதால் வன விலங்குகள், உணவு தேடி குடியிருப்புக்குள் வருவது அதிகரித்துள்ளது. வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைத்து, தீ தடுப்பு காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், குன்னூர் டி.டி.கே. சாலைப் பகுதியில் காய்ந்த செடிகளில் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் இருக்குமாறு, குன்னூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஆர். மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.