கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகளிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிக்கப்படும் பெண்களின் ரகசியம் காக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி., அறிவித்துள்ளது.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகளிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிக்கப்படும் பெண்களின் ரகசியம் காக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி., அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கு கோவை - அவிநாசி சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி., அறிவித்துள்ளது. மேலும், அவ்வாறு புகார் அளிக்கும் பாதிக்கப்பட்ட பெண்களின் ரகசியம் காக்கப்படும். புகார் தெரிவிக்க விரும்பும் பெண்கள் 94884-42993 என்ற எண்ணிலோ, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது கோவை - அவிநாசி சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரிடையாகவோ புகார் மற்றும் தகவல்களை அளிக்கலாம். மேலும், இந்த வன்கொடுமை சம்பவம் குறித்த தகவல்களை பொதுமக்களும் தெரிவிக்கலாம்.
வழக்கின் முக்கியத்துவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி வழக்குத் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.