Breaking: பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றியது குறித்த அரசாணையில் சர்ச்சை : எஸ்.பி.யைத் தொடர்ந்து தமிழக உள்துறைச் செயலருக்கும் சிக்கல்..!

கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட வழக்கு, இன்று சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தமிழக உள்துறைச் செயலரின் அறிவிப்பு கடிதத்தில், பெண்ணின் விபரம் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரம் இடம்பெற்றிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. 

மேலும், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.jடி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டார். மேலும், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் விசாரணை நடத்தவும் ஆணையிடப்பட்டது.

இந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்ட ஓரிரு தினங்களிலேயே, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள் குறித்த தகவல்கள், பெயர்கள், அடையாளங்கள் எதுவும் வெளியிடப்படக் கூடாது என்ற சட்ட விதிமுறை மற்றும் நீதிமன்ற உத்தரவு இருந்தும், காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பதிவிட்டு பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வந்தது. அதேபோல, பெண்கள் ஆணையமும் இந்த செயல்பாட்டை கண்டித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விசாரிப்பதாகவும் ஆணையத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது தமிழக அரசின் உள்துறைச் செயலர் சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில், அந்த வழக்கின் விவரம் அடங்கியதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரும் குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.









Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...