கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட வழக்கு, இன்று சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட வழக்கு, இன்று சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
மேலும், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டார். மேலும், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் விசாரணை நடத்தவும் ஆணையிடப்பட்டது.
இந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்ட ஓரிரு தினங்களிலேயே, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.