கோவையைச் சேர்ந்த பத்மநாபன் கோபாலனுக்கு காமன்வெல்த் யூத் 2019 விருது

கோவை : சர்வதேச அளவிலான காமன்வெல்த் யூத் 2019 விருது கோவையைச் சேர்ந்த 'நோ வேஸ்ட் ஃபுட்' அமைப்பின் நிறுவனர் பத்மநாபன் கோபாலனுக்கு வழங்கப்பட்டது.


கோவை : சர்வதேச அளவிலான காமன்வெல்த் யூத் 2019 விருது கோவையைச் சேர்ந்த 'நோ வேஸ்ட் ஃபுட்' அமைப்பின் நிறுவனர் பத்மநாபன் கோபாலனுக்கு வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் தொழில்முனைவோர், புதுமையை அறிமுகப்படுத்தியவர்கள், சமூக ஆர்வலர்கள் என 16 பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் காமன்வெல்த் யூத் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 30-வது காமன்வெல்த் யூத் விருது வழங்கும் விழா இன்று லண்டனில் நடைபெற்றது. 45 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் விருதிற்கு தேர்வானவர்கள் பட்டியல் கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டது. அதில், இந்தியாவில் இருந்து 2 பேருக்கு காமன்வெல்த் யூத் 2019 விருது வழங்கப்பட்டது. 

அதாவது, பள்ளி உள்பட கல்வி நிறுவனங்களின் மூலமாக, மின்சாரங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் காந்தி அமைப்பின் நிறுவனர் சாய் வெங்கட சத்யா கேதர் இல்லாவும், உலகம் முழுவதும் பசியை போக்க வேண்டும் என்ற குறிக்கோளில் செயல்பட்டு வரும் கோவையைச் சேர்ந்த 'நோ வேஸ்ட் ஃபுட்' அமைப்பின் நிறுவனர் பத்மநாபன் கோபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'நோ வேஸ்ட் ஃபுட்' அமைப்பின் நிறுவனர் பத்மநாபன் கோபாலன் காமன்வெல்த் யூத் 2019 விருதைப் பெற்றார். இந்த விருதை தன்னுடன் சேர்ந்து பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...