200 ஆண்டுகள் பழமைவாய்ந்த வன காவல் தெய்வமான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா

கோவை : மேட்டுப்பாளையம் அருகே 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த வன காவல் தெய்வமான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த வன காவல் தெய்வமான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் வனப்பகுதியினை ஒட்டியுள்ள கிராமமாகும். வனம் சூழ்ந்த இந்தப் பகுதியில் சுமார் 200 ஆண்டுகளாக வனத்திற்கும், ஊர் மக்களுக்கும் காவல்தெய்வமாக விளங்கும் அருள்மிகு கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று புதியதாக பத்தரகாளியம்மன், காமாட்சி அம்மன் சிலைகள் மற்றும் கருப்பண்ணசாமி குதிரை வாகன சிலைகள் அமைக்கப்பட்டு, அதற்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. 



நேற்று இரவு முதல் ஜந்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரிகள் கலந்து கொண்டு வேத, மந்திரங்கள் முழங்க ஒன்று மற்றும் இரண்டு கால வேள்விகள் நடத்தப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர், அந்த வேள்வியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் இன்று யாக சாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுரத்தின் உச்சியில் உள்ள கலசங்களுக்கும், புதியதாக பிரதிஷ்டை செய்த சுவாமி சிலைகளுக்கும் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவை சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் திருப்பள்ளி எழுச்சி பாடி, மங்கள இசை முழங்க விமான கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து, புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கருப்பண்ணசாமி மற்றும் பத்தரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் மலைவாழ் மக்களும் கலந்துகொண்டனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...