உதகையில் குடியிருப்புகளுக்குள் உலா வரும் கரடி : சாலைகளில் செல்லும் மக்களை விரட்டி அட்டகாசம்

நீலகிரி : உதகையில் ஊருக்குள் புகுந்துள்ள கரடி, சாலைகளில் செல்லும் மக்களை விரட்டி அட்டகாசம் செய்து வருகிறது.


நீலகிரி : உதகையில் ஊருக்குள் புகுந்துள்ள கரடி, சாலைகளில் செல்லும் மக்களை விரட்டி அட்டகாசம் செய்து வருகிறது. எனவே, அதனை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி காரணத்தால் தண்ணீர், உணவு தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் வந்து செல்கிறது. இந்த நிலையில், உதகை நகரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் கரடி ஒன்றை, நாய்கள் விரட்டி செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இருப்பினும், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே கரடி கட்டிடங்கள் மீது ஏறியும், அப்பகுதியில் இருந்த மக்களை விரட்டியும் அச்சுறுத்தி வந்தது. பின்னர், மார்க்கெட் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் பதுங்கி உள்ளது.



கரடியை பிடிக்க கால்நடை மருத்துவர்கள் இன்னும் சம்பவ இடத்திற்கு வராததால், அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும், மார்க்கெட் பகுதியில் மக்கள் நடப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...