கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானையை வேட்டையாட முயன்றதாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு மூன்று ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானையை வேட்டையாட முயன்றதாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு மூன்று ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துறையில் கற்கள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, தேனி மாவட்டத்தை சேர்ந்த எம். சென்ட்ராயன், யு. சிவா, பி. குபேந்திரன் மற்றும் பி. சிங்கம் ஆகியோர் காட்டு யானையை வேட்டையாட முயன்றனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து, கோவை மாவட்ட துணை வனப் பாதுகாவலர் சி. தினேஷ் தலைமையிலான வனத்துறையினர், குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம். சென்ட்ராயன், யு. சிவா, பி. குபேந்திரன் மற்றும் பி. சிங்கம் ஆகியோருக்கு தலா ரூ. 10,000 அபராதமும், 3 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து நீதிபது உத்தரவிட்டார். அதுமட்டுமில்லால், தமிழ்நாடு வனத்துறையினர் சட்டத்தின்படி, தலா 6 மாத சிறையும், ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நால்வரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துறையில் கற்கள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, தேனி மாவட்டத்தை சேர்ந்த எம். சென்ட்ராயன், யு. சிவா, பி. குபேந்திரன் மற்றும் பி. சிங்கம் ஆகியோர் காட்டு யானையை வேட்டையாட முயன்றனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து, கோவை மாவட்ட துணை வனப் பாதுகாவலர் சி. தினேஷ் தலைமையிலான வனத்துறையினர், குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம். சென்ட்ராயன், யு. சிவா, பி. குபேந்திரன் மற்றும் பி. சிங்கம் ஆகியோருக்கு தலா ரூ. 10,000 அபராதமும், 3 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து நீதிபது உத்தரவிட்டார். அதுமட்டுமில்லால், தமிழ்நாடு வனத்துறையினர் சட்டத்தின்படி, தலா 6 மாத சிறையும், ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நால்வரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.