பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் : உரிய நிவாரணம் பெற்றுத்தர வலியுறுத்தல்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். 

பந்தலூர் அருகே கையுன்னி பகுதியைச் சேர்ந்தவர் ஏலியாஸ். இவர் தனது தேயிலை மற்றும் காபி தோட்டத்தில் தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட விவசாயப் பயிர்களை பயிரிட்டுள்ளார். கோரஞ்சால் அருகே டாஸ்மாக் கடை எதிரே உள்ள வனத்தில் முகாமிட்டிருந்த யானைகள், விலக்கலாடி - கையுன்னி சாலை வழியாக, ஏலியாஸ் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அங்கு தென்னை, வாழை, மற்றும் பாக்கு மரங்களை சாய்த்து நாசப்படுத்தியுள்ளது. எனவே, காட்டு யானைகளால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு, உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறு விவசாயிகள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், விலக்கலாடி பகுதியில் நாள்தோறும் காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதுடன், சாலை வழியாக நடந்து செல்வதும், விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருவதும் இப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...