நாடாளுமன்ற தேர்தல் களம் '2019' : கோவையில் களமிறங்குகிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..?

கோவை : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை மக்களவை தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோவை : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை மக்களவை தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17-வது மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் தமிழகத்தின் முன்னணி கட்சிகள் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. 

கோவையைப் பொறுத்தவரையில், போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், தி.மு.க. சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட, முன்னாள் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சி.பி.ஐ.(எம்) சார்பில் கோவையில் போட்டியிட்டார். அத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஆர்.பிரபுவை பின்னுக்கு தள்ளியதோடு, 25.19% வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். ஆனால், 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெறும் 2.91% சதவிகித ஓட்டுகள் மட்டுமே வாங்கியவர், 5வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டார்.

மேலும், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணனின் பெயரும் பரீசலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...