பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு மனவேதனை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை : கோவை ஆட்சியர் எச்சரிக்கை

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தேவையின்றி மனவேதனை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தேவையின்றி மனவேதனை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பொள்ளாச்சி வழக்கை திசை திருப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண்ணின் சகோதரர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். மேலும், அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக வேதனை தெரிவித்த அவர், தங்களது குடும்பத்தை களங்கப்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் கூறினார்.

இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை முறையாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், சதீஷ் ஆகிய நால்வரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல், மேலும் சில பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். 

வழக்கை திசைதிருப்ப அரசியல் ரீதியாக முயற்சிகள் நடக்கிறது என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகாரளித்து இருக்கின்றனர். களங்கம் விளைவிக்கும் வகையில், வரும் கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தேவையின்றி பெண்ணின் குடும்பத்தினருக்கு மனவேதனை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

இன்று மாலை தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேர்தல் நன்னடத்தை அமலில் இருப்பதால், அதற்குண்டான விதிமுறைகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. மேலும் பலருக்கும் தொடர்பு இருக்கலாம். இவ்விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளோம், என்று தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...