கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் பெண்களை வன்கொடுமை செய்து ஏமாற்றிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், வகுப்புகளைப் புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பாக அமர்ந்து மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய முற்பட்டனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
