கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
மேலும், சி.பி.சி.ஐ.டி.க்கு விசாரணையை மாற்ற வலியுறுத்தி இன்று மாலை தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சார்பில் போராட்டம் நடைபெறுவதாக அறிவிபக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இன்று அல்லது நாளை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
மேலும், சி.பி.சி.ஐ.டி.க்கு விசாரணையை மாற்ற வலியுறுத்தி இன்று மாலை தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சார்பில் போராட்டம் நடைபெறுவதாக அறிவிபக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இன்று அல்லது நாளை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.