நீலகிரியில் படுகர் இன மக்களின் உப்புஹட்டுவ பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 400 ஊர்களில் வசிக்கும் படுகர் இன மக்களின் உப்புஹட்டுவ பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 400 ஊர்களில் வசிக்கும் படுகர் இன மக்களின் உப்புஹட்டுவ பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 



இப்பண்டிகையின் போது வீட்டிலிருந்து ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து உப்பு, பச்சை கடலை, புல் வகைகள் என கொண்டு வந்து ஆற்றில் கரைத்து, அதிலிருந்து தண்ணீரை மாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட கல்லில் ஊற்றி மாடுகளுக்கு தண்ணீரை கொடுப்பார்கள். மேலும், அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு பின்பு காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கவட்டை இலை, நெறி செடிகளை வீட்டிற்கு கொண்டு செல்வார்கள். அதை வீட்டின் முற்றத்தில் செடிகளை தொங்கவிடுவர். வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் நொடி இல்லாமல் இருக்க அந்த செடிகள் இருக்கும் என ஐதீகம். மேலும், மாடுகளுக்கு உப்பு தண்ணீர் குடிப்பதால், அது மேய்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வரும் என நம்பிக்கையில், நிலகிரியில் உள்ள 400 கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள் சார்பில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.



மேலும், வீட்டில் பாயாசம் வைத்து ஊர் பொதுமக்களை கூப்பிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் கொடுப்பார்கள். இதனால், படுகர்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...