கோவை : பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்து வந்த கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டம் பய்ந்தது. எஞ்சிய 3 பேரை இன்று மதியத்திற்குள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை : பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்து வந்த கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு உள்பட 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளை குறிவைத்து பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட சதீஷ், சபரி ராஜன், மற்றும் வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசையும் சில நாட்களில் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியின் பரிந்துரையின் பேரில், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்தது. இதைத் தொடர்ந்து, எஞ்சிய சதீஷ், சபரி ராஜன், மற்றும் வசந்தகுமார் ஆகிய 3 குற்றவாளிகள் குற்றவாளிகளும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான தகவலை கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் தெரிவித்தார்.