நீலகிரியில் விடிய விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர்

நீலகிரி : நீலகிரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படை குழுக்கள், உரிய ஆவணமின்றி பணம் கடத்தப்படுகிறதா என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய வடிய வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படை குழுக்கள், உரிய ஆவணமின்றி பணம் கடத்தப்படுகிறதா என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய வடிய வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



வருகின்ற மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் ஓராண்டு வரை தண்டனை என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. 

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக உரிய ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத பணப் பறிமாற்றம் குறித்து தாசில்தார் தலைமையில் 5 பேர் கொண்ட பறக்கும் படை வீரர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். 



இவர்கள் ஒரு தொகுதிக்கு 3 ஷிப்ட் வீதம் காலை 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை தொடர்ந்து வாகனங்ளை கண்காணித்து வருகின்றனர். அதில், ஏதாவது பணம் கடத்தப்படுகிறதா என்ற கோணத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

இது குறித்து வட்டாட்சியர் கண்ணதாசன் கூறும்போது :- உரிய ஆவணங்கள் இன்றி 50,000 மேல் பணம் எடுத்து வரப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். அதிகாரிகளுக்கு தேவையான சான்றுகளை வழங்கினால் மட்டுமே வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...