கோவை : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது தெரியாமல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவை : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது தெரியாமல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில், 17-வது மக்களவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை முதலே நன்னடைத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், இதனை அறியாமல் பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்க வந்திருந்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது உங்களுக்கு தெரியுமா..? என கேட்டபோது, தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்கள் மூலம் அறிந்தோம். ஆனால், மனு கொடுத்தால் பெற மாட்டார்கள் என்பது தெரியாது எனவும், எப்போது இனி மனுவை வாங்குவார்கள் என பரிதாபமாக நம்மிடம் திருப்பி கேட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் படங்கள், பிளக்ஸ் பேனர்கள், அரசியல் தொடர்பான போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில், 17-வது மக்களவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை முதலே நன்னடைத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், இதனை அறியாமல் பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்க வந்திருந்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது உங்களுக்கு தெரியுமா..? என கேட்டபோது, தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்கள் மூலம் அறிந்தோம். ஆனால், மனு கொடுத்தால் பெற மாட்டார்கள் என்பது தெரியாது எனவும், எப்போது இனி மனுவை வாங்குவார்கள் என பரிதாபமாக நம்மிடம் திருப்பி கேட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் படங்கள், பிளக்ஸ் பேனர்கள், அரசியல் தொடர்பான போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.