கோவை : தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோவை : தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் போது, தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், மார்ச் 19-ம் தேதி வேட்பு மனு தாக்கலும், மார்ச் 26-ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 27-ம் தேதியும், மார்ச் 29-ம் தேதியும் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கூறுகையில், "தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும். வழக்கு நிலுவையில் உள்ளதால், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடலாம்," எனக் கூறினார்.
இதேபோல, புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுடன் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும்," என்றார்.
புதுச்சேரியில் சொத்து குவிப்பு வழக்கில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் பதவியிழந்ததால் இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் போது, தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், மார்ச் 19-ம் தேதி வேட்பு மனு தாக்கலும், மார்ச் 26-ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 27-ம் தேதியும், மார்ச் 29-ம் தேதியும் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கூறுகையில், "தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும். வழக்கு நிலுவையில் உள்ளதால், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடலாம்," எனக் கூறினார்.
இதேபோல, புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுடன் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும்," என்றார்.
புதுச்சேரியில் சொத்து குவிப்பு வழக்கில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் பதவியிழந்ததால் இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.