குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதியில் ரூ. 50 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்

நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதியில் ரூ. 50 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தை தென்னிந்திய கண்டோன்மென்ட்களின் முதன்மை இயக்குநர் எல்.கே.பெகு தொடக்கி வைத்தார்.

நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதியில் ரூ. 50 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தை தென்னிந்திய கண்டோன்மென்ட்களின் முதன்மை இயக்குநர் எல்.கே.பெகு தொடக்கி வைத்தார்.

குன்னூர் அருகே மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கண்டோன்மென்ட் போர்டு செயல்பட்டு வருகிறது. இதில், 7 வார்டுகள் உள்ளன. வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் உள்ள 62 கண்டோன்மென்ட்களில் சிறந்த கண்டோன்மெண்ட்டாக குன்னூர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள 7 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாதாள சாக்கடை திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா கண்டோன்மென்ட் மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தென்னிந்திய கண்டோன்மென்ட்களின் முதன்மை இயக்குநர் எல்.கே.பெகு தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ்வர்மா, நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். அர்ஜுணன், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, கண்டோன்மென்ட் துணைத் தலைவர் எம்.பாரதியார், பிரிகேடியர் பங்கஜ் பி. ராவ், கர்னல் பி. பி. பெர்க்கர், பொறியாளர் சுரேஷ், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், கண்டோன்மென்ட் நியமனம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...