கோவை : இந்திய கப்பற்படையைச் சேர்ந்த அதிகாரி சுவாதிக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கோவை : இந்திய கப்பற்படையைச் சேர்ந்த அதிகாரி சுவாதிக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
ஓட்டல் ரெசிடென்சியில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பு சார்பில் பெண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கப்பற்படையில் இணைந்து 8 மாதங்களாக பணியாற்றி வரும் இந்திய கப்பற்படையைச் சேர்ந்த அதிகாரி சுவாதி உள்பட 6 பெண் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் கமாண்டர் பி. சுவாதி பேசியதாவது :- நாட்டிற்காக சேவை செய்ய பாலினம் ஒரு தடையில்லை. பெண்களால் எந்த நிலையையும் எட்ட முடியும். மேலும், எப்படிபட்ட சூழ்நிலைகளையும் கையாளும் நம்பிக்கை ஏற்படும். நான் உள்பட 6 பெண்கள் ஆசிய அளவில் முதல் பெண்கள் ராணுவ குழு என்ற பெருமையை பெற்றுள்ளோம்.

இந்தக் குழு, ஐ.என்.எஸ்.வி. தைரினி கப்பலில் உலகளவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு காலநிலைகளில் ஆண்டுக்கு 254 நாட்கள் கடலில் 21,600 மைல் தொலைவில் 8 மாதங்களாக பணியாற்றினோம். கடந்த 2017-ம் ஆண்டு செப்., 10-ம் நாள் கோவாவில் தொடங்கிய எங்களது பயணம் கடந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி மீண்டும் கோவாவிலேயே முடிந்தது, என்றார்.