கோவை : கோவையில் இடதுசாரிகள் சார்பில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை : கோவையில் இடதுசாரிகள் சார்பில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாசித்தார். முதல் தீர்மானமாக, புல்வாமாவில் மரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
2-வது, தீர்மானமாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக அழித்ததற்காக விமான படையின் அதிரடி தாக்குதலுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு, காஷ்மீர் பிரச்சினையில் ஆயுதங்கள் மூலம் தீர்வு என்று ஆகாமல் அரசியல் ரீதியாக தீர்வு காண்பது தான் அமைதிக்கும், தொடர் முன்னேற்றதிற்கும் வழிவகையாக அமையும் என்பதினை மக்களின் கவனதிற்கு கொண்டு வருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வளர்ச்சி, முன்னேற்றம், நிர்வாகத்தில் ஊழலற்ற வெளிப்படைதன்மை என்ற முழக்கத்துடன் பிரதமர் மோடி முன்னிறுத்தப்பட்டார். ஆனால், வளர்ச்சி என்பது கார்பரேட் கம்பெனிகள் தான் பலனடைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என சாமானிய பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.45 வருட வரலாற்றில் இல்லாத வேலையின்மை நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க பா.ஜ.க வையும் அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வினர் மதவெறி, சாதிவெறி, பணவெறி, பதவிவெறி சக்திகளை தோற்கடித்து மக்களவை தேர்தலில் மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி கட்சிக்கு வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாசித்தார். முதல் தீர்மானமாக, புல்வாமாவில் மரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
2-வது, தீர்மானமாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக அழித்ததற்காக விமான படையின் அதிரடி தாக்குதலுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு, காஷ்மீர் பிரச்சினையில் ஆயுதங்கள் மூலம் தீர்வு என்று ஆகாமல் அரசியல் ரீதியாக தீர்வு காண்பது தான் அமைதிக்கும், தொடர் முன்னேற்றதிற்கும் வழிவகையாக அமையும் என்பதினை மக்களின் கவனதிற்கு கொண்டு வருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வளர்ச்சி, முன்னேற்றம், நிர்வாகத்தில் ஊழலற்ற வெளிப்படைதன்மை என்ற முழக்கத்துடன் பிரதமர் மோடி முன்னிறுத்தப்பட்டார். ஆனால், வளர்ச்சி என்பது கார்பரேட் கம்பெனிகள் தான் பலனடைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என சாமானிய பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.45 வருட வரலாற்றில் இல்லாத வேலையின்மை நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க பா.ஜ.க வையும் அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வினர் மதவெறி, சாதிவெறி, பணவெறி, பதவிவெறி சக்திகளை தோற்கடித்து மக்களவை தேர்தலில் மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி கட்சிக்கு வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.