கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான இட கையகப்படுத்தும் விவகாரத்தில் அதிகாரிகள் தான் அடிக்கடி மாறி வருவதாகவும், ஆனால் பிரச்சனைக்கு இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை என விமான நிலைய விரிவாக்கதிற்கு இடம் கொடுத்தவர்கள் குமுறுகின்றனர்.
கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான இட கையகப்படுத்தும் விவகாரத்தில் அதிகாரிகள் தான் அடிக்கடி மாறி வருவதாகவும், ஆனால் பிரச்சனைக்கு இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை என விமான நிலைய விரிவாக்கதிற்கு இடம் கொடுத்தவர்கள் குமுறுகின்றனர்.
கோவை விமான நிலைய விரிவாக்கதிற்கு காளப்பட்டி கிராமம், நீலிக்கோணாம்பாளையம், சிங்காநல்லூர் பகுதிகளில் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கபட்டு இருந்தது. இதில், ஒரு சிலர் விலை குறைவாக உள்ளது என கூறி வந்தனர். விவசாய நிலங்களுக்கு ரூ. 900-மும், தொழில் நிறுவன இடங்களுக்கு ரூ. 1,500-ம், அப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை பொதுபணித்துறை மூலம் அளவீடு செய்யபட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டு இருந்தது.
மேலும், நியாயமான விலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலர் கடந்த ஆண்டு நிலம் கையகத்திற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டனர். இந்த நிலையில், இதுவரை உரிய இழப்பீடு வழங்காமல் தங்களை அலைகழிப்பதாக நிலங்களை ஒப்படைத்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், "கடந்த வாரம் தமிழக ஆளுநர் வருகையின் போது, விமான நிலையத்தில் நுழைய முயன்று, தங்களது பிரச்சனை குறித்து விமான நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க முயற்சி எடுத்தோம். அப்போது, பாதுகாப்பு போலீசார் எங்களை தடுத்து நிறுத்தினர். மேலும், பீளமேடு காவல் நிலையதிற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல் ஆய்வாளர் இது குறித்து விசாரனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
அதன் பேரில், இன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்துள்ளோம். இழப்பீடு வழங்கக்கூடிய அதிகாரிகள் தான் அடிக்கடி மாறி வருகின்றனர். ஆனால், இப்பிரச்சனைக்கு தீர்வு மட்டும் இதுவரை எட்டப்படவில்லை," இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கோவை விமான நிலைய விரிவாக்கதிற்கு காளப்பட்டி கிராமம், நீலிக்கோணாம்பாளையம், சிங்காநல்லூர் பகுதிகளில் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கபட்டு இருந்தது. இதில், ஒரு சிலர் விலை குறைவாக உள்ளது என கூறி வந்தனர். விவசாய நிலங்களுக்கு ரூ. 900-மும், தொழில் நிறுவன இடங்களுக்கு ரூ. 1,500-ம், அப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை பொதுபணித்துறை மூலம் அளவீடு செய்யபட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டு இருந்தது.
மேலும், நியாயமான விலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலர் கடந்த ஆண்டு நிலம் கையகத்திற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டனர். இந்த நிலையில், இதுவரை உரிய இழப்பீடு வழங்காமல் தங்களை அலைகழிப்பதாக நிலங்களை ஒப்படைத்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், "கடந்த வாரம் தமிழக ஆளுநர் வருகையின் போது, விமான நிலையத்தில் நுழைய முயன்று, தங்களது பிரச்சனை குறித்து விமான நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க முயற்சி எடுத்தோம். அப்போது, பாதுகாப்பு போலீசார் எங்களை தடுத்து நிறுத்தினர். மேலும், பீளமேடு காவல் நிலையதிற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல் ஆய்வாளர் இது குறித்து விசாரனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
அதன் பேரில், இன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்துள்ளோம். இழப்பீடு வழங்கக்கூடிய அதிகாரிகள் தான் அடிக்கடி மாறி வருகின்றனர். ஆனால், இப்பிரச்சனைக்கு தீர்வு மட்டும் இதுவரை எட்டப்படவில்லை," இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.