நீலகிரி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குன்னுார் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்ததால், இத்தொழிலை நம்பியுள்ள சுற்றுலா வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குன்னுார் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்ததால், இத்தொழிலை நம்பியுள்ள சுற்றுலா வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் லாம்ஸ்ராக் காட்சிமுனையில் இருந்து பர்லியார், மேட்டுப்பாளையம், பக்காசூரன்மலை உட்பட சுற்றுப்புற பகுதிகளின் இயற்கை காட்சிகள் சுற்றுலாப்பயணிகளை வசீகரிக்கிறது.

இதற்கு முன்பாக, மேகமூட்டம் இருக்கும் காலங்களில் இங்கிருந்து பெரும்பாலான இயற்கை காட்சிகள் ரசிக்க முடியாமல் இருந்தது. தற்போது, பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், இதன் சுற்றுப்புற பகுதிகளில், நீல வானத்துடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் லாம்ஸ்ராக் சுற்றுலாத் தலத்தை காணாமல் செல்வதில்லை என்பதால் இங்கு எப்போதும் கணிசமான அளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று குவிந்த சுற்றுலாப்பயணிகளால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் லாம்ஸ்ராக் காட்சிமுனையில் இருந்து பர்லியார், மேட்டுப்பாளையம், பக்காசூரன்மலை உட்பட சுற்றுப்புற பகுதிகளின் இயற்கை காட்சிகள் சுற்றுலாப்பயணிகளை வசீகரிக்கிறது.

இதற்கு முன்பாக, மேகமூட்டம் இருக்கும் காலங்களில் இங்கிருந்து பெரும்பாலான இயற்கை காட்சிகள் ரசிக்க முடியாமல் இருந்தது. தற்போது, பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், இதன் சுற்றுப்புற பகுதிகளில், நீல வானத்துடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் லாம்ஸ்ராக் சுற்றுலாத் தலத்தை காணாமல் செல்வதில்லை என்பதால் இங்கு எப்போதும் கணிசமான அளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று குவிந்த சுற்றுலாப்பயணிகளால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.