கோவையில் காதலித்து ஏமாற்றிய காதலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளைஞர் கதறல்

கோவை : தன்னைக் காதலித்து ஏமாற்றிய காதலி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இளைஞர் ஒருவர் அழுது புலம்பியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : தன்னைக் காதலித்து ஏமாற்றிய காதலி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இளைஞர் ஒருவர் அழுது புலம்பியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்.இம்மானுவேல் (27), கடந்த 5 வருடங்களாக தன்னுடன் நெருக்கமாகப் பழகிய காதலி தன்னை ஏமாற்றிச் சென்றுவிட்டதால் மன உளைச்சலில் இருப்பதாகவும், இதுகுறித்து காவல்துறையிடம் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அழுது புலம்பி பரபரப்பை ஏற்படுத்தினார். 



இது குறித்து இம்மானுவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;- ஐந்து வருடங்களாகக் காதலித்த பெண்ணை 2017 -ம் ஆண்டு திருமணம் செய்தேன். திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவில்லை, ஆனால், அவர் என்னிடம் நெருங்கிப் பழகியதற்கான சான்றுகள் அனைத்தும் என்னிடம் உள்ளது. திருமணம் ஆன சில நாட்களில் அவர் என்னை பிரிந்துவிட்டார். அவரின் குடும்பத்தார் பேச்சு வார்த்தைக்காக என்னை அழைத்து, பின்பு அடித்துத் துன்புறுத்தினர். 

இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்தும், என்னை காதலித்து ஏமாற்றியவர் மீதும், தாக்கியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மனதளவும் உடலளவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என் காதலி மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...