கோத்தகிரி விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

நீலகிரி : கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீலகிரி : கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பொங்கல் விடுமுறையைக் கொண்டாடும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உதகை சென்றனர். காணும் பொங்கல் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு, அவர்கள் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் வந்த மினி வேன், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோத்தகிரி முதல் கொண்டை ஊசி வளைவில் வளையும் பொழுது, எதிர்பாராதவிதமாக சுவற்றின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. 

இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக படுகாயமடைந்த சசிகுமார் (31), சுபா (24), குமார் (22), ப்ரீத்தி (18), அம்மு (40), கவிதா (34), தட்சிணாமூர்த்தி (21), அபிநயா (14), அருள்குமார் (42), டிராவிட் (18), தனுஷ் (15), ஜோதிகா (16), ரவி (51), சரளா (40), ராஜா (48), ரவி (47), சங்கீதா (36), ஸ்ரீலதா (19) ஆகியோரை நான்கு 108 ஆம்புலன்ஸ்களில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குமார் என்ற இளைஞர் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால்தான் இளைஞர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...