கோவை : விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்கக் கோரியும் மூன்றாவது நாளாக விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
கோவை : விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்கக் கோரியும் மூன்றாவது நாளாக விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்லத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதனால் 13 மாவட்டங்களில் 8 மையங்களில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் பல நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மையத்தில் நடைபெறும் போராட்டத்தில் இன்று விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் ஜெ.சி.பி., டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை மையத்திற்கு கொண்டு வந்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இது குறித்து ஏர்முனை இளைஞர் அணி மாநிலத் துணை தலைவர் சுரேஷ் கூறுகையில், "போராட்டம் தொடரும், போராட்டத்தைத் தீவிரப்படுத்த அதன் வடிவம் நாளுக்கு நாள் மாற்றப்படும்," என்றார்.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்லத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதனால் 13 மாவட்டங்களில் 8 மையங்களில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் பல நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மையத்தில் நடைபெறும் போராட்டத்தில் இன்று விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் ஜெ.சி.பி., டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை மையத்திற்கு கொண்டு வந்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இது குறித்து ஏர்முனை இளைஞர் அணி மாநிலத் துணை தலைவர் சுரேஷ் கூறுகையில், "போராட்டம் தொடரும், போராட்டத்தைத் தீவிரப்படுத்த அதன் வடிவம் நாளுக்கு நாள் மாற்றப்படும்," என்றார்.