கோவை : காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புவதாகக் கூறி அவருடைய பாராளுமன்ற பதிவியை பறிக்க வேண்டுமென பா.ஜ.கவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை : காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புவதாகக் கூறி அவருடைய பாராளுமன்ற பதிவியை பறிக்க வேண்டுமென பா.ஜ.கவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கடந்த 2007 -ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதன்படி, பல்வேறு பரிசீலனைக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் டஸ்சோ நிறுவனத்திடம் இருந்து விமானங்கள் வாங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் பறப்பதற்கு தயார் நிலையில் உள்ள விமானங்கள் 18 மற்றும் மீதமுள்ள 108 விமானங்களுக்கு தொழில்நுட்பத்தை டசோ நிறுவனம் வழங்க இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உற்பத்தி செய்யும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2014 -ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று பிரதமராக மோடி பதிவியேற்றார். இதையடுத்து, 2015 -ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி 36 விமானங்கள் வாங்கப் போவதாக அறிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு விமானத்தின் விலை ரூ.1670 கோடி என மாற்றம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப உதவிகளை ஹெ.ஏ.எல் நிறுவனத்திற்கு டசோ வழங்கும் இருந்த முந்தைய ஒப்பந்தம் தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் விமானம் வாங்கியதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, கோவை மாவட்ட பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக பாரத பிரதமர் மோடி மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். மேலும், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தவறான தகவல்களைப் பரப்பு வருவதால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்த பாஜகவினர் அதற்காக மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்துள்ளனர்.