வரும் 28-ம் தேதி உற்பத்தி பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மதிப்பு மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம்

கோவை : கோவை மாநகரில் மாவட்ட தொழில் மையத்தில் வரும் 28-ம் தேதி உற்பத்தி பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மதிப்பு மேம்படுத்துதல் பற்றிய கருத்தரங்கம் நடக்கிறது.

கோவை : கோவை மாநகரில் மாவட்ட தொழில் மையத்தில் வரும் 28-ம் தேதி உற்பத்தி பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மதிப்பு மேம்படுத்துதல் பற்றிய கருத்தரங்கம் நடக்கிறது. 

தமிழ்நாடு அரசின் தன்னாட்சி சேவை நிறுவனமான தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சிறு, குறு தொழில்முனைவோர் மற்றும் குழுமம் சேர்ந்த அமைப்பினருக்கும் ஊக்கமளிக்கும் வகையில், கருத்தமர்வுகள் தொடர் பயிற்சிப் பட்டறைகள், அனுபவப் பகிர்வு மற்றும் விழிப்புணர்வுக் கல்வி ஆகியவற்றை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது. 

அந்த வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வடிவமைப்பு பற்றி நுணுக்கங்கள் அறிந்து கொள்ளும் வகையில், வரும் 28-ம் தேதி கோவை மாநகரில் ஒருநாள் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. இக்கருத்தரங்கில் வடிவமைப்புத்துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர். இதன்மூலம், பலதரப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர். 

மேலும் விபரங்களுக்கும், இக்கருத்தரங்கில் தங்களின் பெயர்கள் பதிவு செய்யவும் 8668100336 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...