முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் இந்த ஆண்டுக்கான 2-வது வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் இந்த ஆண்டுக்கான 2-வது வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது. 

தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் முக்கியமானது முதுமலை புலிகள் காப்பகமாகும். இதன் கீழ் முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி, நெலாக்கோட்டை, சிங்காரா, சீகூர், தெங்குமராடா ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. புலிகள் வாழ ஏற்ற வனப்பகுதியாக இருப்பதால், புலிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள புலிகள் உள்பட வனவிலங்குகள் குறித்து ஆண்டுக்கு 2 முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா..?, அவற்றுக்கு தேவையான உணவுகள் வனப்பகுதியில் கிடைக்கிறதா..? என்பது குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. மேலும், வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான எந்த வசதியினை வனத்துறையினர் செய்து கொடுக்க வேண்டி உள்ளது என்பது குறித்தும் அறிய முடிகிறது.



அதன்படி, இந்த ஆண்டுக்கான 2-வது கணக்கெடுப்பு பணி தொடங்கியது. முதற்கட்டமாக, முதுமலை புலிகள் காப்பக மையப் பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தெப்பக்காட்டில் உள்ள அரங்கில் நடந்த பயிற்சி முகாமில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் செண்பகவள்ளி தலைமை தாங்கினார். அதில், எவ்வாறு வனவிலங்குகளை கணக்கெடுப்பது, தகவல்களை சேகரித்து பதிவு செய்வது என்பது குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பயிற்சி முடித்தவர்கள் 29 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த 29 குழுவினரும் புலிகள் உள்பட அனைத்து வனவிலங்குகளையும் கண்காணித்து கணக்கெடுக்க உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு வனத்துறை ஊழியர் 2 வேட்டை தடுப்புகாவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் வரும் 22-ந் தேதி மாலை வரை வனப்பகுதியில் தங்கி, கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

23-ந் தேதி தெப்பக்காடு பயிற்சி அரங்கிற்கு திரும்பி வரும் அவர்கள், தாங்கள் சேகரித்த தகவல்களை புலிகள் காப்பக அதிகாரிகளிடம் வழங்குவார்கள். இதேபோல, புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் 35 குழுவினருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமில் வனச்சரகர்கள் ராஜேந்திரன், சிவக்குமார், சுரேஷ்குமார், தயாநந்தன், விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...