தடாகத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை விநாயகன் முதுமலைக்கு அனுப்பி வைப்பு

கோவை : பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு மயக்க மருத்து செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை விநாயகன் முதுமலைக்கு அனுப்ப வாகனத்தில் ஏற்றப்பட்டது.


கோவை : பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு மயக்க மருத்து செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை விநாயகன் முதுமலைக்கு அனுப்ப வாகனத்தில் ஏற்றப்பட்டது.

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் விளைநிலங்களைச் சேதப்படுத்திய காட்டு யானைகளைப் பிடிக்க வனத்துறையினர் வெகுநாட்களாக முயன்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முதன்மை வனப்பாதுகாவலர் உத்தரவின் பேரில் காட்டு யானைகளைப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.



அந்த முயற்சியில், காலை 6.30 மற்றும் 7.30 -க்கு விநாயகத்திற்கு ஊசி மூலமாக 11 மி.லி அளவிலான மயக்க மருந்து இரு முறைகளாகச் செலுத்தப்பட்டது. இதனால் கட்டுக்குள் வந்த விநாயகத்தின் இரண்டு கால்கள் கயிற்றைக் கொண்டு கட்டப்பட்டன. இந்த நடவடிக்கையில் கும்கி யானைகள் விஜய், வாசிம் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் பங்கு அளப்பரியது. 



இதையடுத்து, மயக்க நிலையில் இருந்த ஆண் யானை விநாயகத்தின் கழுத்தில் ரேடியோ பட்டை ( radio collar) அணிவிக்கப்பட்டது. ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட அந்த பட்டை காட்டு யானையின் ஒவ்வொரு அடியையும் கண்காணிக்க உதவும். முதுமலை காட்டிற்கு இடமாற்றியதும் அதன் செயல்பாடுகளை கவனிக்க அந்த பட்டைக் கட்டப்பட்டது.

"பிடிக்கப்பட்ட காட்டு யானை விநாயகன் பந்திபூர், முதுமலை, வயநாடு வனங்களை இணைக்கும் பகுதியில் விடப்படும்," என்றார் வனத்துறை பாதுகாவலர் தீபக் ஶ்ரீவத்சவா.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...