திண்டுக்கல் : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான அருள்மிகு லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான அருள்மிகு லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலானது அருள்மிகு லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று பரமபதவாசல் திறக்கப்பட்டது.
ஆண்டிற்கு ஒருமுறை திறக்கப்படும் பரமபதவாசல் வழியாக அருள்மிகு லஷ்மிநாராயண பெருமாள் தம்பதி சமேதராக கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். லஷ்மிநாராயண பெருமாள் கோவிலைக் தொடர்ந்து பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரம் அக்டோபரில் வரதராஜபெருமாள் கோவிலிலும் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
மேலும், பரமபதம் வாசல் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலானது அருள்மிகு லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று பரமபதவாசல் திறக்கப்பட்டது.
ஆண்டிற்கு ஒருமுறை திறக்கப்படும் பரமபதவாசல் வழியாக அருள்மிகு லஷ்மிநாராயண பெருமாள் தம்பதி சமேதராக கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். லஷ்மிநாராயண பெருமாள் கோவிலைக் தொடர்ந்து பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரம் அக்டோபரில் வரதராஜபெருமாள் கோவிலிலும் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
மேலும், பரமபதம் வாசல் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.