நீலகிரி : குந்தா தாலுகாவிற்கு மஞ்சூர் பகுதியில் காவல்துறையினர் வாடகை வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
நீலகிரி : குந்தா தாலுகாவிற்கு மஞ்சூர் பகுதியில் காவல்துறையினர் வாடகை வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குந்தா தாலூக்காவிற்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வாகனங்களை இயக்கி சுமார் 100 ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மஞ்சூர் பேருந்து நிலையம் அருகில் அவர்களுக்கான வாகனநிறுத்தம் அமைத்து வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விடுவதால் போக்குவரத்து இடையூறு மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, மஞ்சூர் காவல்துறையினர் வாடகை வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு, தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கியுள்ளதாகவும், வாடகை வாகனங்கள் வைத்திருப்பவர்கள் 30 வாகனங்களுக்கு மட்டும் நிறுத்த அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும், சுமார் 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மஞ்சூர் பஜாரில் வாடகை வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கி தருமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
நீலகிரி மாவட்டம் குந்தா தாலூக்காவிற்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வாகனங்களை இயக்கி சுமார் 100 ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மஞ்சூர் பேருந்து நிலையம் அருகில் அவர்களுக்கான வாகனநிறுத்தம் அமைத்து வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விடுவதால் போக்குவரத்து இடையூறு மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, மஞ்சூர் காவல்துறையினர் வாடகை வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு, தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கியுள்ளதாகவும், வாடகை வாகனங்கள் வைத்திருப்பவர்கள் 30 வாகனங்களுக்கு மட்டும் நிறுத்த அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும், சுமார் 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மஞ்சூர் பஜாரில் வாடகை வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கி தருமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.