தன்னிலை மறந்து தரையில் படுத்து தூங்கி ஓய்வு எடுக்கும் முகாம் யானைகள்

கோவை : தேக்கம்பட்டி யானைகள் நல்வாழ்வு முகாமில், யானைகள் தன்னிலை மறந்து தரையில் படுத்து குறட்டை விட்டு தூங்கி வருவது பாகன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : தேக்கம்பட்டி யானைகள் நல்வாழ்வு முகாமில், யானைகள் தன்னிலை மறந்து தரையில் படுத்து குறட்டை விட்டு தூங்கி வருவது பாகன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான புத்துனர்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இயற்கையான சூழலில் மலை அடிவாரத்தில் நடத்தப்படும் இந்த முகாமில் 27 யானைகள் பங்கேற்றுள்ளன. யானைகளுக்கு பவானி ஆற்றில் உற்சாகக் குளியல், பசுந்தீவனம் நடைப்பயிற்சி, ஊட்டச்சத்து உணவு என உற்சாகத்தில் திகைத்துள்ள முகாம் யானைகள், தன்னிலை மறந்து தரையில் படுத்து குரட்டை விட்டு தூங்கி வருவது முகாமில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவிலில் திருப்பணிகளை மேற்கொண்டு கற் தரையில் எப்போதும் நின்றபடி இருக்கும் இந்த யானைகளுக்கு, பகல், நேரங்களில் ஓய்வு என்பது இருக்காது. எப்போதும் மக்கள் கூட்டத்தின் நடுவேயும், வாத்திய இசைகள் ஒலித்தவாறு கோவில்களில் பணிகளை செய்து வரும் யானைகள் தற்போது தனிமையில் பகல் நேரத்திலேயே, தன்னிலை மறந்து தரையில் படுத்து தூங்கி ஓய்வு எடுத்து வருவது பாகன்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

யானைகள் பொதுவாக நின்றவாறு தான் கண்களை மூடி தூங்கும் தரையில் படுத்து தூங்குவது என்பது யாரும் இதுவரை காணமுடியாத காட்சியாகும். ஆனால், இந்தப் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள், இது தங்களுக்கான ஓய்வு என்பதை தற்போது உணர்ந்திருப்பதாக கூறும் பாகன்கள், தங்களின் மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக, தரையில் உள்ள மண்ணை எடுத்து உடல் முழுவதும் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...