பிரபல கஞ்சா வியாபாரி யமகா ரவி குண்டர் சட்டத்தில் கைது

கோவை : சட்டவிரோதமாக கல்லூரி மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த பிரபல கஞ்சா வியாபாரி யமகா ரவி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை : சட்டவிரோதமாக கல்லூரி மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த பிரபல கஞ்சா வியாபாரி யமகா ரவி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பொம்முசெட்டி வீதியைச் சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் ரவி என்ற யமகா ரவி. இவர் பல வருடங்களாக சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வருகிறார். கடந்த மாதம் சுண்டக்காமுத்தூர் அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, கஞ்சா விற்பனை செய்து வந்த ரவியை போலீசார் பிடிக்க முயற்சி செய்யும் பொழுது அவர் தப்பி ஓடியுள்ளார். பின்னர் போலீசார் ரவியை துரத்தி மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, இவர் மீது வழக்குப் பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் சிபாரிசின் பேரில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், கஞ்சா வியாபாரி ரவியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவானது கோவை மத்திய சிறை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...