திருப்பூர் : உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூண்டுக்கு சரியான விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர் : உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூண்டுக்கு சரியான விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உடுமலை அருகே தமிழக - கேரளா எல்லை பகுதியான மறையூா் காந்தலூா் மலைப் பகுதிகளில் பூண்டு அதிகளவில் விவசாயிகளால் பயிர் செய்யப்படுகிறது. தற்போது, பூண்டு விளைந்து பறித்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் பூண்டுக்கு உரிய விலை கிடைக்காததால் பயிர் செய்த பூண்டை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த மாதம் வரை கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பூண்டு, தற்போது கிலோ ரூ. 30 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலைக்கு விற்பனை செய்தால் கொள்முதல் செய்த பணத்தைக் கூட திரும்பப் பெற முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால், பயிர் செய்த பூண்டுகளை வயல்வெளிகளில் பரண் போல் அமைத்து, மழை வெயிலில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். உரிய விலை வரும் போது விற்பனை செய்து கொள்வற்காக பாதுகாத்து வைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
