கோவை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்றக்கோரி கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்றக்கோரி கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்ததைக் கண்டித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை டாடாபாத் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முறையாகக் கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிடவில்லை எனவும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு கபட நாடகம் ஆடுவதாகவும் அவ்வமைப்பினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்ததைக் கண்டித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை டாடாபாத் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முறையாகக் கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிடவில்லை எனவும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு கபட நாடகம் ஆடுவதாகவும் அவ்வமைப்பினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.