கோவை : தங்களது பூர்வீக விவசாய நிலத்தை அளிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைகீழாக நடந்து வந்து மனு அளித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : தங்களது பூர்வீக விவசாய நிலத்தை அளிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைகீழாக நடந்து வந்து மனு அளித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் சத்ரபதி (53). இவர், இந்து அறநிலையத் துறையால் கையகப்படுத்தப்பட்ட தங்களுக்கு சொந்தமான பூர்விக விவசாய நிலத்தை திரும்ப அளிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைகீழாக நடந்து வந்து மனு அளிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி முறையாக மனு அளிக்குமாறு கூறியதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் சென்று மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "குனியமுத்தூர் தருமராஜா திரொளபதி அம்மன் கோவிலில் பரம்பரையாகப் பூஜை செய்து வருகிறோம். முப்பாட்டன் காலத்தில் மன்னர் காலத்தில் பிழைத்துக் கொள்ள குலத்துப்பாளையத்தில் 1.12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு, அதில் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில், பூஜை செய்யும் உரிமையை இந்து அறநிலையத்துறை பறித்துவிட்டது. அதோடு, விவசாய நிலத்தையும் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என விளம்பரப் பலகை வைத்துள்ளனர். எனவே, எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தங்களது பூர்விக நிலத்தை தங்களுக்கே வழங்கிட வேண்டும்," என்றார்.
கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் சத்ரபதி (53). இவர், இந்து அறநிலையத் துறையால் கையகப்படுத்தப்பட்ட தங்களுக்கு சொந்தமான பூர்விக விவசாய நிலத்தை திரும்ப அளிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைகீழாக நடந்து வந்து மனு அளிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி முறையாக மனு அளிக்குமாறு கூறியதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் சென்று மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "குனியமுத்தூர் தருமராஜா திரொளபதி அம்மன் கோவிலில் பரம்பரையாகப் பூஜை செய்து வருகிறோம். முப்பாட்டன் காலத்தில் மன்னர் காலத்தில் பிழைத்துக் கொள்ள குலத்துப்பாளையத்தில் 1.12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு, அதில் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில், பூஜை செய்யும் உரிமையை இந்து அறநிலையத்துறை பறித்துவிட்டது. அதோடு, விவசாய நிலத்தையும் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என விளம்பரப் பலகை வைத்துள்ளனர். எனவே, எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தங்களது பூர்விக நிலத்தை தங்களுக்கே வழங்கிட வேண்டும்," என்றார்.